அறிவாளிகள் மற்றும் அனாசியமான திறன் மிக்கவர்களின் மூளை சாதாரண விசயங்களில் சரிவர இயங்குவது இல்லையாம். எழுதுவது என்று என்னும் போதெல்லாம் எதை எழுதுவது என்ற அற்ப கேள்விக்கு என் மூளை திணறித்தான் போகிறது. நானே என்னை அறிவாளி என்று சொல்லவில்லை என்றால் எப்படி? நாமளாவது சொல்லிப்போமே ! இந்த முறை இன்றைய நீயா?நானா? விவாதத்தை மூளை தாண்டவில்லை. தாண்டவே இல்லை.
காதலர்களே இன்றைய எழுத்து உங்களுக்கானது.காதலை காதலனிடமோ / காதலியிடமோ சொல்வது கொஞ்சம் கடினமானது. அதை செய்ய தெரியாதவர்கள் மேலும் தொடர்வதா என முடிவு செய்துகொள்ளவும். மேலும் நீங்கள் காத்திருந்து பெற்றோர் காட்டுபவரை மணக்கவும்.வாழ்த்துக்கள்.
சரி காதலை ஆரம்பித்தாயிற்று , பெற்றோரிடம் சொல்வது எப்படி? அதற்காகவே இந்த பதிவு.உங்களுக்குகான சில பயனுள்ள கருத்துக்கள். சொந்த மற்றும் கேள்வி ஞானம் மூலம் பெறப்பட்டது.
இரண்டு மூன்று மாதத்தில் அல்லது குறுகிய காலத்தில் திருமணம் நடைபெற வேண்டிய கட்டாயத்தில் பேசினால் பலன் எதிர்மறையாகவே இருக்கும். கூடிய மட்டும் பதினெட்டு மாதங்கள் அல்லது அதற்க்கு முன்பாகவே பேச ஆரம்பியுங்கள். குறைவான காலக்கெடு அதிக மன அழுத்தத்தையும் , காதலர்களுக்கு இடையே மனவருத்ததையும் உண்டுபண்ணும். தவறான முடிவுகளுக்கும் வழிவகுக்கும்.
உங்கள் காதல் குறித்து உங்கள் பெற்றோரிடம் பேசும் பொழுது தேவைக்கு ஏற்ப பொய்யை கலந்து கூறவும். அனைத்து உண்மையை கூறுவது "நுணலும் தன் வாயால் கெடும்" என்பதற்கு சமம். பொய்யை கூறும் முன்னர் காதலர்கள் பொய்யை மனனம் செய்து கொள்ளவும்.காதல் தொடங்கியது எப்படி என்பதற்கு பெரும்பாலும் பொய்களை சொல்லவும். உங்களுக்கு உதவி செய்தவர்கள் குறித்து அதில் வராத வண்ணம் பார்த்துகொள்ளவும்.
வீட்டிற்கு வெளிய தோட்டம் அல்லது ஏதேனும் இயற்கை வெளியில் சொல்வதை தேர்ந்து எடுக்கவும். அப்பா அல்லது அம்மா யாரேனும் ஒருவரிடம் மட்டுமே ஆரம்பியுங்கள். இருவரிடமும் என்பது அறவே வேண்டாம். யாரிடம் எதிர்ப்பு அதிகம் வருமோ? அல்லது வரும் என்று எதிர்பார்கின்றீர்களோ அவரிடம் ஆரம்பியுங்கள். எந்த காரணம் கொண்டும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் பேச வேண்டாம்.
சந்தோசமான மனநிலையின் போது பேசவும்." நான் ஒரு பெண்ணை/ ஆணை காதலிக்கிறேன் " என்பதை விட . "இன்னாருடன் என் திருமணத்தை அடுத்த வருடம் வைத்து கொள்ளலாமா? " என்ற வகை அநேக கருத்துக்களை உள்ளடக்கி விடும். "அடுத்த வருடம் நடத்தி வையுங்கள் என்பது வேண்டாம்".இந்த கலந்தாலோசனை ஓரளவு பாதகம் இன்றி செல்லும் பொருட்டு அடுத்து அடுத்து கலந்தாலோசனைகளை தொடரவும்.இல்லை எனில் பதினெட்டு மாதங்களை சரிவர பயன்படுத்தவும்.
தங்க விதிகள் :
இறந்து விடுவதாய் மிரட்டும் பொழுது பதிலுக்கு மிரட்டுவதை தவிர்த்து பேசுவதை தள்ளி போடவும்.
உங்களை விட்டால் யாரிடம் கேட்பேன் என்ற பாசம் தொக்கிய கேள்விகள் அடிக்கடி கேட்கப்பட வேண்டும்.
நீங்கள் தனிமை படுவதாய் உணர்த்தவும்.
நீங்கள் மரணத்தை தழுவுவேன் என்று மிரட்டுவது கடைசி ஆயுதமாக இருக்கட்டும்.வெகு காலமாய் அப்படி ஒரு முடிவை எடுக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையை கொடுத்து பின்னர் மிரட்டுவது நல்ல முடிவை தரும்.இது உங்கள் கடைசி ஆயுதமே.
கடைசி ஆயுதம் தரும் முடிவை பொருத்து உங்கள் இறுதி முடிவு உங்கள் கையில்.
குறிப்பு:
திருமணம் என்பது காதலை தொடர்வதே. என்னை பொறுத்தவரை காதல் வெற்றி என்பது உங்கள் குழந்தை என் அப்பா அம்மா தான் சிறந்த துணை என்று அவர் தம் இருபதுகளில் சொல்வதுதான்.
