அக்டோபர் 24, 2011

திரைபடத்திற்கு பிறகு ...

காலை எட்டு ம‌ணி அள‌வில் க‌திர‌வ‌ன் நாளித‌ழை வாசித்து ,அத‌ன் இணைப்பு புத்தகங்கள் ,கையில் கிடைக்கும் துண்டு சீட்டு என தொடர்ந்தது தான் என வாசிப்பு ஆர்வம்.ஆன்மிக புத்தகம், சுய முன்னேற்ற புத்தகம் என வாசித்து பழகிய எனக்கு சென்னை வந்த பின்புதான் பல்வேறு தளங்கள் மார்க்ஸ், ஏங்கல்ஸ்,மால்கம்,சே என எண்ணற்ற தலைவர்களை அறிமுக படுத்தியது.இறை நம்பிக்கை,நாடு,மனிதன் என அனைத்தின் மீதும் கேள்வியை விதைக்க வைத்தது வாசிப்பு தான்.
சாதி,மதம்,இன‌ம் ம‌ற்றும் மொழி குறித்த கேள்விக‌ள் தொட‌ர்ந்து கொண்டும் அதற்கான பயணம் சீரற்ற இடைவெளியில் நடந்து கொண்டும் இருக்கிறது.எழுத்தார்வம் எப்படி வந்தது என்பதும், காதல்,பணம்,போலி கௌரவம் தாண்டி என்னை எழுது, எழுது என்று சொல்வதும் எப்படி என்பது தான் தெரியவில்லை.

இந்த பதிவிற்கு "திரைபடத்திற்கு பிறகு ..." எனவும் என் பக்கத்திற்கு "வாகை சூட வா" என்று பெயர் வைத்ததிற்கும் காரணம் "வாகை சூட வா" படம்.இதற்கு முன்னர் கிட்டத்தட்ட ஐம்பது பதிவுகள் எழுதிய என்னை இரண்டு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் எழுத தூண்டிய படம்.ஒரு கிராமத்திற்கு சென்று கல்வி அறிவை பகிர இயலாமல் போனாலும், இணையம் மூலம் தகவல்களை பகிர தூண்டிய படம்.என் பக்கம் ஒரு அதற்க்கு ஒரு சமர்ப்பணம்.

கார்பரேட் உலகில் சமூகம் குறித்து ஏதும் அறியாமல். அறிய விருப்பம் இல்லாமல் பணம் தேடும் பயணத்தில் தன்னையே தொலைத்தவர் பலர்.நான் உணர என‌க்கு கிடைத்த வாய்ப்பு என் எழுத்தின் மூலம் சிலருக்காவது கிட்டும் என்பது எண்ணம்.கார்பரேட் என்று அல்ல அனைவருக்கும் இதில் ஏதேனும் இருக்கும்.

என்னை குறித்து

இய‌ற்பெய‌ரில் எழுத‌ வேண்டாம் என்பதும் என் சுய விவரத்தின் பொருட்டு கருத்தின் தாக்கம் சாயம் பூசப்பட வேண்டாம் என்பதும் புனைப்பெயரில் எழுத ஒரு காரணம். சௌமியா என்பது என் தோழியின் பெயர். அவள் மீது கொண்டுள்ள நட்பின் காரணமாய் அவளுடைய பெயரையே என் புனைபெயராய் கொண்டு எழுதுவது எனவும் முடிவு செய்து எழுதுகிறேன்.
தயாரிப்பு என்றி எந்த பதிவும் எழுத வேண்டாம் என்று முடிவு செய்து இருப்பதால் பதிவிற்கு இடையே இடைவெளி இருக்கலாம். பொறுத்து அருளவும்.

ஆங்கில மற்றும் வட மொழி கலப்பினை தவிர்க்கவும், இலக்கண மற்றும் எழுத்து பிழை தவிர்க்கவும் உங்கள் பங்களிப்பு வரவேற்க படுகிறது.கருத்துகளை பகிர கீழ்கண்ட மின் அஞ்சல் முகவரிக்கு அஞ்சல் அனுப்பலாம்.

sowmya241989@gmail.com

1 கருத்து:

வவ்வால் சொன்னது…

வாகை சூட, வாழ்த்துகள்!

கருத்துரையிடுக